நேற்று இரவு வெளியான பரபரப்பு செய்தி.! இந்திய ராணுவ இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் விளக்கம்.!
indian army general press meet
கடந்த வாரம் ஜம்மு-காஷ்மீர் கத்துவா மாவட்டத்திலுள்ள ஹரிநகர் பகுதியில் பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி வீடுகளைக் குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் படுகாயமடைந்தார். இதற்கு இந்திய இராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது.
மேலும், நக்ரோட்டா மாவட்டத்திலுள்ள பான் சோதனைச் சாவடியில், தீவிரவாதிகள் நடத்திய மற்றொரு தாக்குதலில் இருந்த 2 காவலர்கள் படுகாயம் அடைந்தனர். தீவிரவாதிகளுக்கு தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த எல்லைப் பாதுகாப்புப் படையினர், நான்கு தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.
இந்த நிலையில், நேற்று இரவு இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் துல்லியத் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது. இது குறித்து விளக்கம அளித்துள்ள இந்திய ராணுவ இயக்குநர் லெப்டினன்ட் ஜெனரல் பரம்ஜித் சிங், "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்து போலியானது" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
indian army general press meet