#Breaking: மே 15 வரை ரத்து., சற்றுமுன் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.!
ind aus flight cancel
கொரோனா பரவல் காரணமாக, மே மாதம் 15 ஆம் தேதிவரை ஆஸ்திரேலிய இந்திய விமான சேவை ரத்து செய்யப்படுகிறது.
உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவத்தொடங்கியது. தற்போது 200-க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசால் 148,480,035 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வைரசால் 3,133,637 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை 126,099,853 பேர் குணமடைந்துள்ளனர். சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்கா மற்றும் பிரேசிலில் தன் கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,23,144 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 2771 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,76,36,307 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக, மே மாதம் 15 ஆம் தேதிவரை ஆஸ்திரேலியா இந்திய விமான சேவை ரத்து செய்யப்படுவதாக ஆஸ்திரேலியா அரசு அறிவித்துள்ளது.
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.