காதல் ஜோடி உல்லாசம் அனுபவித்த வீடியோ.! காதலிக்கு மிரட்டல் விடுத்த கொடூரன்.. விசாரணையில் பேரதிர்ச்சி உண்மை.!!
in karnadaga girl sexual harassment by lover police investigation going on
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தை சார்ந்தவர் அங்கூர் குமார். இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் ரூபென் அக்ரஹார பகுதியில் தங்கியிருந்து ஊழியராக பணியாற்றி வரும் நிலையில்., திருமணத்திற்காக தனியார் இணையத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
இதன் அடைப்படையில்., பெங்களூரில் பணியாற்றி வரும் கணினி பொறியாளரின் விபரங்களை பார்த்து விருப்பம் தெரிவித்துள்ளார். இவரின் விருப்பமானது இருவருக்கும் பிடிக்கவே., கடந்த நவம்பர் மாதத்தின் போது இருவரும் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
இந்த சமயத்திலேயே இருவரும் பேசி காதலர்களாக மாறிய நிலையில்., அடிக்கடி திருமணம் செய்துகொள்வதாக கூறி உல்லாசம் அனுபவித்துள்ளான். இந்த செயலை கொடூரன் பெண்ணிற்கு தெரியாமல் காட்சிப்பதிவாக எடுத்து வைத்துள்ளான்.
இந்த தருணத்தில்., குமாரின் பெற்றோருக்கு இவர்களின் காதல் விவகாரம் தெரியவரவே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதன் காரணமாக பெற்றோர்கள் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததை அடுத்து., பெண்ணுடன் பேசுவதையும் மறுத்து வந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்மணி நண்பர்களின் அலைபேசியில் இருந்து தொடர்பு கொண்டு பேசியதை அடுத்து., ஆத்திரமடைந்த குமார் பெண்ணை திட்டியுள்ளார். இந்த சமயத்தில்., காம கொடூர எண்ணத்தை கொண்ட குமார்., பெண்ணிற்கு உல்லாச வீடியோ பதிவை அனுப்பி வைத்து., வரும் 22 ஆம் தேதியன்று எனது நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளான். மேலும்., நான் சொல்வதை செய்யாவிட்டால் வீடியோவை ஆபாச இணையத்தில் பதிவேற்றிவிடுவதாக மிரட்டியுள்ளான்.
இதனால் பயந்துபோன பெண்மணி இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., இது குறித்த புகாரை ஏற்று வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் குமாருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in karnadaga girl sexual harassment by lover police investigation going on