பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளான பேருந்து.. அலறிய பயணிகள்.. அரங்கேறிய சோகம்.!!
in jammu kashmir bus accident peoples died
இந்த உலகம் முழுவதும் விபத்துகள் என்பது தொடர்கதையாகியுள்ளது. தினமும் பல்வேறு விதமான விபத்துக்கள் தொடர்ந்து அரங்கேறி மக்கள் பரிதாபமாக பலியாகி வருவது தொடர்ந்து நடைபெற்று பெரும் அதிர்வலையை பதிவு செய்கிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை பொறுத்த வரையில் அவ்வப்போது விபத்துகள் அரங்கேறி மக்கள் பலியாவது தொடர்ந்து பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தியஹ்ல் உள்ள ரஜோரி மாவட்டத்தில் சுரன்கோட் உள்ளது.
இந்த நகரில் இருந்து புறப்பட்ட பேருந்தில் ஏராளமான மக்கள் பயணம் செய்தனர். இப்பேருந்து அங்குள்ள ஸியாத் பகுதியில் சென்ற சமயத்தில் எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்து அங்கிருக்கும் பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
இதனைக்கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான வாகன ஓட்டிகள் விபத்து குறித்து மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் பணிகளை மேற்கொண்டனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்து இருந்த 13 பேரை மீட்ட மீட்பு படையினர் அங்குள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும்., சம்பவ இடத்திலேயே பலியான 6 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in jammu kashmir bus accident peoples died