நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்- 4 பேர் கைது!!
Impersonation in NEET exam 4 people arrested
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக 4 பேர் கொண்ட கும்பலை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும், நரேஷ் பிஸ்ரோய் என்பவர் இந்த கும்பலுக்கு தலைமை தாங்கியதாகவும், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு பதிலாக முதலாம் ஆண்டு மாணவர்களை தேர்வு எழுத வைத்ததும் காவல்துறையினரின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் தங்களை அணுகும் மாணவர்களிடம் தலா ரூ.7 லட்சம் வசூல் செய்து ஆள்மாறாட்டம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குற்றவாளிகளிடமிருந்து லேப்டாப் மற்றும் செல்போன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Impersonation in NEET exam 4 people arrested