''நான் உயிருடன் தப்பித்ததை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை'' : உருக்குலைந்த விமானத்தில் ஒருவனாய் உயிர் தப்பிய விஸ்வாஸ் ரமேஷ் பேட்டி..! - Seithipunal
Seithipunal


நேற்று மதியம் குஜராத்தில் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டனுக்கு சென்ற ஏர் இந்திய விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த பயணியர் மற்றும் விமான ஊழியர்கள் என 241 பேர் உயிரிழந்துள்ளதாக ஏர் இந்திய நிறுவனம் மற்றும் மாநில அரசு உறுதிப்படுத்தியுள்ளது. இதில் ஒரே ஒரு நபர் மட்டுமே அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

சிகிச்சைக்காக மருத்துவமனையில் தங்கியுள்ள விஸ்வாஸ் குமார் இந்த விபத்தில் உயிர் தப்பியமை குறித்து கூறியுள்ளதாவது: ''எல்லாம் என் கண் முன்னே நடந்தது; நான் உயிருடன் தப்பித்ததை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை'' என தெரிவித்துள்ளார்.

அத்துடன், நான் விழுந்த இடம் விடுதியின் தரைப்பகுதி. என் கண்முன்னே விமான பணி பெண்கள் மற்றும் பயணிகள் உயிரிழந்த சம்பவங்கள் நிகழ்ந்தது. விமானம் வெடித்த போது எனது இருக்கை அருகே விரிசல் விழுந்தது. அதை பயன்படுத்தி வெளியே குதித்தேன். எனது இடது கையில் தீப்பிடித்தது. உரிய நேரத்தில் மீட்பு படையினர் என்னை மீட்டு ஆம்புலன்ஸில் ஏற்றினர். விமானம் விழுந்த பகுதியின் எதிர் பக்கத்தில் சுவர் இருந்ததால் யாரும் தப்பிக்க முடியவில்லை என்று அவருடைய  திகில் நிறைந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

மேலும், இந்த விபத்து குறித்து பிரதமர் மோடி தன்னிடம் என்று கூறிய அவர், தான் அமர்ந்திருந்த பகுதியில் மட்டுமே தப்பிக்க இடம் இருந்தகாகவும். விபத்தில் தானும் இறந்திருப்பேன் என்று நினைத்ததாகவும், அனைத்து துயர சம்பவங்களும் தன கண் முன்னே நிகழ்ந்தது என்று குறிப்பிட்ட அவர், மருத்துவ கல்லூரி விடுதியில் விமானம் மோதிய பக்கம் தான் அமரவில்லை, அத்துதான் அவர் தப்பிக்க உதவியதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், குறித்த விமானத்தில் அவர் 11 நம்பர் சீட்டில் அமர்ந்து இருந்ததாக கூறப்பட்டது, விபத்தின் போது அவரச வெளியேற்றத்திற்கான கதவு உள்ள பகுதி அது. அந்த சீட் உடைந்து தனியாக வந்ததால் அவசர வழி வழியாக அவர் உயிர் தப்பியதாகவும், புறப்பட்ட சிறிது நேரத்தில் பெரும் சத்தத்துடன் விமானம் விழுந்து நொறுங்கியதாக தெரிவித்துள்ளார். மேலும், விமானத்தில் தன்னை சுற்றிலும் உடல்கள் சிதறிக் கிடந்ததாகவும், ஒரு பக்க அவசர வழி சேதமடைந்த நிலையில், மறுபக்க அவசர வழி வழியாக வெளியேறியதாக குறிப்பிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I still cant believe I escaped alive says Vishwas Kumar survived the plane crash


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->