மருமகனிடம் அத்துமீறிய அத்தை... சிறுவனிடம் சில்மிஷம் செய்ததால் பாய்ந்த போக்சோ.! - Seithipunal
Seithipunal


மருமகனிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி பணம் பறித்து வந்த சம்பவம் ஹைதராபாத்தில் பரபரப்பை உருவாக்கியது. 

பெங்களூரு பகுதியில் வசிக்கின்ற அத்தை தனது மருமகனை சந்திக்க அடிக்கடி ஹைதராபாத் வருவது வழக்கம். அந்த மருமகன் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவனாக இருக்கிறார். ஹைதராபாத்திற்கு வரும்பொழுதெல்லாம் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் ஓட்டலில் ரூம் எடுத்து தங்கி தனது மருமகனுடன் பாலியல் ரீதியாக அந்த அத்தை உடலுறவு வைத்துள்ளார்.

அப்பொழுது தனது முன்னாள் கணவர் மூலம் செல்போனில் வீடியோ எடுத்து, இருவரும் உடலுறவு வைத்ததை வெளியில் வீடியோவாக வெளியிட்டு விடுவேன் என்று அந்த மருமகனை மிரட்டி மிரட்டி சிறிது சிறிதாக 6 லட்சம் ரூபாய் பணம் மற்றும் தங்க நகைகள் அவர் வாங்கியுள்ளார். 

சிறிது சிறிதாக வீட்டில் இருந்த பணம் காணாமல் போனதால் வீட்டில் இருப்பவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டு அந்த சிறுவனிடம் விசாரணை மேற்கொண்ட பொழுது அத்தையின் மிரட்டல் நாடகம் குறித்து சிறுவன் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட பெண்மணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தகாத முறையில் உறவு வைத்து சிறுவனிடம் பணம் பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hyderaapaath women harras child boy


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->