சொல்லியும் கேட்கவில்லை... மனைவியுடன் மீண்டும் கள்ளத்தொடர்பு... ஆத்திரத்தில் கணவர் செய்த செயல்.!
Husband stabs his wife illegal lover with a knife in Karnataka
கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே தலகட்டபுரா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் மாருதி (26). இவர் மோட்டார் சைக்கிள் ஷோரூம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் தலகட்டபுராவை சேர்ந்த அசோக் என்பவரின் மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
இதையறிந்த அசோக் மனைவியையும், மாருதியையும் கண்டித்துள்ளார். ஆனால் அதன் பிறகும் இரண்டு பேரும் கள்ளத்தொடர்பை கைவிடாமல் இருந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அசோக் குமார், மாருதியிடம் நேரில் பேச வேண்டும் என்று திப்புசந்திராவுக்கு வரும்படி அழைத்துள்ளார்.
பின்பு இருவருரிடையே இதுகுறித்து வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த அசோக் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாருதியை குத்தி கொலை செய்துள்ளார். இதையடுத்து கள்ளத்தொடர்பு விவகாரத்தில் மாருதி கொலை செய்த சம்பவம் தெரிய வந்ததையடுத்து இது குறித்து வழக்கு பதிவு செய்த தலகட்டபுரா போலீசார், அசோக்கை கைது செய்தனர்.
English Summary
Husband stabs his wife illegal lover with a knife in Karnataka