ஆந்திராவில் தீப்பிடித்து எரிந்த ஹவுரா எக்ஸ்பிரஸ்..! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து ஹௌராவுக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் ஆந்திர மாநிலம் குப்பம் அருகே சென்ற போது திடீரென தீப்பிடித்து எரிந்தது. ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் தீப்பிடித்தவுடன் புகை கிளம்பியதை கண்ட பயணிகள் அனைவரும் அலறியடித்து கூச்சலிட்டனர்.

இதனைத் தொடர்ந்து ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் குப்பம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட பின் பயணிகள் அனைவரும் தங்களது உடைமைகளுடன் ஓட்டம் பிடித்தனர்.

தீப்பிடித்து எறிந்த பெட்டியில் இருந்த அனைவரையும் போலீசார் வெளியேற்றியதால் பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்.

ரயில் பெட்டியில் பிடித்த தீயை அனைத்தும் வேலையில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை உண்டாக்கியது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Howrah Express caught fire in Andhra Pradesh


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->