மைசூரு அரண்மனை அருகே பயங்கரம்..! ஹீலியம் சிலிண்டர் வெடித்து வியாபாரி பலி...!
horrific incident near Mysuru palace helium cylinder exploded killing vendor
கர்நாடக மாநிலத்தின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் மைசூரு அரண்மனையின் ஜெயமார்த்தாண்டா வாசல் பகுதி, நேற்று மாலை ஒரு கணத்தில் பேரதிர்ச்சியின் களமாக மாறியது.
அங்கு ஹீலியம் பலூன்கள் விற்பனை செய்து வந்த உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தைச் சேர்ந்த சலீம் (40) என்பவருக்கு நேர்ந்த துயரமான விபத்து, அனைவரையும் உறைய வைத்தது.
நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில், பலூன்களை நிரப்புவதற்காக பயன்படுத்தப்பட்ட ஹீலியம் சிலிண்டர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. எதிர்பாராத இந்த விபத்தில், பலூன் வியாபாரி சலீம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
வெடிப்பின் அதிர்வால் சுற்றியிருந்த பகுதி முழுவதும் புகை மற்றும் குழப்பத்தில் மூழ்கியது.மேலும், அருகில் இருந்த ஐந்து பேர் பலத்த காயங்களுடன் சிதறி விழுந்தனர்.
இந்த தகவல் கிடைத்த உடனே மீட்புப் படையினரும் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த திடீர் விபத்தால் மைசூரு அரண்மனை சுற்றுவட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஹீலியம் சிலிண்டர் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டதா? அலட்சியமா? என்ற கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
horrific incident near Mysuru palace helium cylinder exploded killing vendor