பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள் கொரோனா தடுப்பூசி எடுக்க வேண்டாம் - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.!
Health Ministry Warn Pregnant Ladies and baby Breast Milk Feeding Woman does not inject Corona Vaccine
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைக்கு பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசியை உற்பத்தி செய்யும் சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை பரிந்துரை செய்யவில்லை.
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதால், அந்த பெண்களின் உடலில் உருவாகும் கருவில் உள்ள சிசுவிற்கும் செல்லும் என்பதால், பிறக்கும் போதே குழந்தைகளுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை பெறும் என முதலில் நம்பப்பட்டது.
தற்போது வரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட தாய்மார்களுக்கு எந்த விதமான பக்க விளைவு ஏற்பட்டதற்கான ஆதாரம் இல்லை என்றாலும், கர்ப்பகாலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால், தடுப்பூசி போட்டுக் கொள்வதை தவிர்க்கலாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் அறிவுரை தெரிவிக்கின்றனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Health Ministry Warn Pregnant Ladies and baby Breast Milk Feeding Woman does not inject Corona Vaccine