சானிடரி நாப்கினுக்குள் தங்கம்? நூதன முறையில் கைவரிசை காட்டி கைதான பெண் பயணி! - Seithipunal
Seithipunal


துபாயில் இருந்து கேரளா கொச்சிக்கு வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. 

தகவலின் பெயரில் சுங்கத்துறை அதிகாரிகள் கொச்சி நெடும்பச்சேரி விமான நிலையத்தில் துபாய் விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை தொடர்ந்து சோதனை செய்தனர். 

அப்போது துபாய் விமானத்தில் பயணித்த ஒரு பெண் கிரீஸ் சேனல் வழியாக வெளியே செல்ல முயன்றார். அதனைப் பார்த்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர் மீது சந்தேகம் அடைந்து அவரை தடுத்து நிறுத்தினர்.  

பின்னர் அவரையும் அவரது உடமைகளையும் சோதனை செய்தனர். சோதனையில் அவரது உடலில் தங்கம் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. 

பின்னர் அந்த பெண்ணை சோதனை செய்த போது 679 கிராம் தங்கம் சானிட்டரி நாப்கினுக்குள் வைத்திருந்ததை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ. 29 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தியதில் தங்கத்தை கடத்தி வந்த பெண் திருப்பூரை சேர்ந்தவர் என தெரிய வந்தது. அவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gold inside sanitary napkin smuggling Woman arrested 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->