இன்று முதல் பேருந்து, ஆட்டோ மற்றும் டாக்ஸி கட்டணம் உயர்வு.. அரசு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை தொடர்ந்து பஸ் ஆட்டோ டாக்சி கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கேரளாவை சேர்ந்த ஆட்டோ டாக்சி தொழிற் சங்கங்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் இதுகுறித்து கேரள மாநில போக்குவரத்து துறை ஆலோசனை நடத்தியது. இதில் சாதாரண பேருந்து கட்டணத்தை ரூ.10ல் இருந்து ரூ.12 ஆகவும், விரைவு பேருந்து கட்டணத்தை ரூ.14ல் இருந்து ரூ.15 ஆகவும், அதி விரைவு பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.20ல் இருந்து ரூ.22 ஆகவும் உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து கேரள சட்டசபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் பேருந்து ஆட்டோ மற்றும் டாக்சி கட்டண உயர்வுக்கு ஒப்புதல் அளிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

From today bus, auto and taxi spare increased in Kerala


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->