மது பாட்டிலில்.. செத்து மிதந்த தவளை.. மது பிரியருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


சத்தீஸ்கர் பகுதியில் மது குடிக்க வந்த குடிமகன் ஒருவர் வாங்கிய மது புட்டிக்குள் இறந்த தவளை இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தீபாவளியை முன்னிட்டு பல மாநிலங்களிலும், மது விற்பனை அமோகமாக நடந்தது. அந்த வகையில், சத்தீஸ்கர் மாநிலத்திலும் மது விற்பனை களை கட்டியது. ஹார்டி பகுதியில் இயங்கி வந்த ஒரு மதுபான கடையில் இளைஞர் மதுபானத்தை வாங்கிக் கொண்டு அருந்துவதற்காக திறந்துள்ளார். 

அப்போது அந்த பாட்டிலுக்குள் தவளை இறந்த நிலையில் மிதந்து கொண்டிருப்பதை பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து, தான் மது வாங்கிய கடைக்கு சென்று தகராறில் ஈடுபட்டார். இது பற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. 

அவர் தகராறு செய்ததை தொடர்ந்து கடை மேலாளர், "மதுபானங்கள் தீவிர பரிசோதனைக்கு பின் தான் விற்பனைக்கு வருகின்றன. இந்த போற சம்பவம் நடந்தது. இதுதான் முதல் முறை. இருப்பினும், இது குறித்து தக்க விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்." என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

frog in liquor bottle satisgar


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->