அதிவேகமாக வீட்டிற்குள் புகுந்த கார்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 05 பேருடன் மற்றும் ஒருவர் பலி..!
Five members of the same family and one other person died in a car crash into a roadside house in Maharashtra
சாலையோரத்தில் உள்ள ஒரு வீட்டினுள் வேகமாக சென்ற கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 05 பேர் உள்பட 06 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.இதில் படுகாயமடைந்த ஒருவர் சிகிசச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் கல்வான் தாலுகாவில் உள்ள கோலாப்பூர் பாட்டாவில் இந்த கொடூர சம்வபம் இடம்பெற்றுள்ளது.
மாநிலத்தின் சாட்டனாவில் உள்ள நாம்பூரை சேர்ந்த ஒரு குடும்பத்தினர், நாசிக்கில் நடைபெற்ற உறவினரின் திருமண விழாவிற்கு சென்றுவிட்டு, வீடு திரும்பும் போது, அவர்கள் சென்ற கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, அதிவேகமாக சென்றுள்ளது. அப்போது குறித்த கார் நாசிக்-கல்வான் சாலையில் இருந்த ஒரு வீட்டிற்குள் புகுந்தது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் வீட்டில் இருந்த 04 பேர் உள்பட 05 பேர் சம்பவம் நடந்த இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்தில் ஷாய்லா வசந்த பதன் 62, அவரது மகள் மாதவி மேத்கர் 32, அவரது பேத்தி திரிவேனி மேத்கர் 04, அவரது உறவினரான சர்லா பாலசந்திர பதன் 50, டிரைவர் கலிஹ் மஹமூத் பதன் 50, என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
காயங்களுடன் சிகிச்சக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த மேத்கரின் 12 வயது மகன் சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார். விபத்தில் அவர்களது உறவினர் பாலசந்தர பதன் 52, பலத்த காயங்களுடன் சிகிச்சையில் உள்ளார். இந்த கார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விரிவான விசாரணை நடந்து வருவதாக கல்வான் போலீசார் தெரிவித்துள்ளனர்.
English Summary
Five members of the same family and one other person died in a car crash into a roadside house in Maharashtra