தனியார் பள்ளியில் '1ம் வகுப்பு' சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்த பெற்றோர்..! - Seithipunal
Seithipunal



ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை, சிறுமியின் பெற்றோர் பள்ளிக்கே சென்று தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்துள்ள பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

ஆந்திர மாநிலம் ஹைதராபாதில் உள்ள 'கிரண்  இண்டெர்நேஷனல்' பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். அதில் பெரும்பாலும் அருகிலுள்ள சுற்றுவாட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் தான் அந்தப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் படிக்கும் 1ம் வகுப்பு சிறுமி ஒருவர் திடீரென பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என்று வீட்டில் தொடர்ந்து அடம் பிடித்ததாகத் தெரிகிறது. 

இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் தொடர்ந்து அந்த சிறுமியிடம் விசாரித்தபோது பள்ளியின் நடன ஆசிரியர், நடனம் சொல்லித் தருவது போல் சிறுமியின் அந்தரங்கப் பகுதிகளை தொட்டு அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. 

இதையடுத்து அந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைவரும் அந்த பள்ளிக்கு நேரில் சென்று நடன ஆசிரியரை பள்ளியின் தலைமை ஆசிரியரின் அறைக்கு இழுத்துச் சென்று கடுமையாக தாக்கியுள்ளனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக பள்ளிக்கு விரைந்து சென்று சிறுமியின் பெற்றோரிடம் இருந்து நடன ஆசிரியரை மீட்டு, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியரிடமும், நடன ஆசிரியரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.1ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு  பள்ளியில் பணிபுரியும் ஆசிரியரே பாலியல் தொல்லை கொடுத்த இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

First Standard Girl Sexually Abused By Teacher in Private School


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->