இறந்த மகன் உயிர்பிழைத்து விடுவான்.. உப்பு படுக்கையில் மகனின் சடலத்தை 8 மணி நேரம் வைத்திருந்த தந்தை..! - Seithipunal
Seithipunal


உயிர் பிழைத்துவிடுவான் என உப்பு படுக்கையில் 8 மணி நேரம் சிறுவனை வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், பல்லாரி மாவட்டம் சிரவாரா கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவருக்கு பாஸ்கர் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த பாஸ்கர் தண்ணீர் தேங்கி இருந்த குழியில் விழுந்துள்ளான். மகனை காணாமல் தேடிய பெற்றோர் அவன் பிணமாக தண்ணீரில் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

இதற்கிடையில் முகநூலில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தவர்கள் மீது உப்பு குவியலை கொட்டினால் 2 மணி நேரத்தில் உயிர் பிழைத்து விடுவார்கள் என படித்தாக கூறிய சேகர் பாஸ்கர் உடல் மீது உப்பு குவியலை போட்டார்.
ஆனால் 8 மணி நேரம் ஆகியும் பாஸ்கர் உயிர் பிழைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனை அடுத்து, அவரின் உடலை அடக்கம் செய்தனர். சிறுவனின் உடல் மீது உப்பு குவியல் கொட்டி வைத்திருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Father Put his son body into salt


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->