நாடு முழுவதும் ரெயில் மறியல் போராட்டம் - அதிரடி காட்டும் விவசாயிகள்.! - Seithipunal
Seithipunal


விவசாயிகள் கடந்த மாதம் டெல்லியை நோக்கிய பேரணியை தொடங்கினர். நீண்ட கால போராட்டத்திற்கு தேவையான பொருட்களுடன் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஏராளமான டிராக்டர்களில் வந்த விவசாயிகளை பஞ்சாப்-அரியானா இடையே உள்ள ஷம்பு மற்றும் கனவுரி எல்லைகளில் போலீசார் தடுத்து நிறுத்தினர். 

இதனால் விவசாயிகள் அங்கேயே கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் டெல்லிக்குள் நுழைந்துவிடாதபடி தடுப்பதற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வரும் விவசாய சங்கத்தினரையும் தடுப்பதற்காக டெல்லியின் பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில், இன்று மதியம் நாடு முழுவதும் 4 மணி நேரம் ரெயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்தனர். அதாவது, மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடும்படி சம்யுக்தா கிசான் மோர்ச்சா, மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்தன. 

அதன்படி, பல்வேறு மாநிலங்களில் விவசாய சங்கத்தினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பாதுகாப்பு கருதி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

farmers train strike protest in india


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->