தொழிலதிபரிடம் ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்ட அமலாக்கத்துறை துணை இயக்குநர் கைது! சிபிஐ அதிகாரிகள் அதிரடி! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் அமலாக்க இயக்குநரகத்தில் துணை இயக்குநராகப் பணியாற்றி வந்த சிந்தன் ரகுவன்ஷி, லஞ்சம் பெற்ற புகாரில் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2013 ஆம் ஆண்டுக்கான இந்திய வருவாய் சேவையின் அதிகாரியான அவர், புவனேஸ்வரில் உள்ள ஒரு சுரங்கத் தொழிலதிபரிடம் பணமோசடி வழக்கிலிருந்து பெயரை நீக்குவதாகக் கூறி ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் முதல் தவணையாக ரூ.20 லட்சம் பெற்றதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் சிந்தன் ரகுவன்ஷியின் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அதில் கணக்கில் காணப்படாத பணி தொகைகள் கைப்பற்றப்பட்டன.

தற்போது அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணைக்காக காவலில் வைத்துள்ளனர். உயர் பதவியில் இருக்கும் அதிகாரி ஒருவர் லஞ்சத்தில் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Enforcement Directorate corruption bribery cbi arrest


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->