தமிழக மக்களுக்கு நிம்மதி ஏற்படுத்தும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்த செயல்.! - Seithipunal
Seithipunal


உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியா முழுவதும் 657 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. மேலும் இந்த வைரசுக்கு இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தியா முழுவதும் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள ஊரடங்கு உத்தரவு அத்தியாவசிய காரணங்கள் தவிர மற்ற காரணங்களுக்காக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தினக் கூலி தொழிலாளிகள் அன்றாட உணவுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியான நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்று எழுதி உள்ளார். அதில் கொரோன வைரஸை எதிர்கொள்ள ரூபாய் 4,000 கோடி நிதி தேவை, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி கொரோனா பாதிப்பு மற்றும் சவால்களை எதிர்கொள்ள தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. 

மேலும் வங்கி வட்டி மற்றும் அபராத தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும். சிறு, குறு, நடுத்தர தொழில் செய்வார் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என கோரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edappadi palaniasami letter to pm modi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->