தொடர்ந்து அச்சுறுத்தும் நிலநடுக்கங்கள்.! மேகாலயாவில் 4.0 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்.! - Seithipunal
Seithipunal


மேகாலயாவின் தூர நகரில் இன்று காலை(ஞாயிற்றுக்கிழமை) 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது தூர நகரில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் இன்று காலை காலை 9.49 மணியளவில் ஏற்பட்டுள்ளது. பூமிக்கடியில் 25 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இதற்கு முன்பாக கடந்த வாரம் மேகாலயாவில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் கிழக்கு காசி மலையில் 46 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

துருக்கி-சிரியாவை தொடர்ந்து இந்தியா, ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா, நியூசிலாந்து போன்ற பல நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்படுவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Earthquake of 4 magnitude hits meghalaya


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->