காலை நேரத்தில் நில அதிர்வு...! மேகாலயாவில் 2.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்...! - Seithipunal
Seithipunal


மேகாலயா மாநிலத்தின் மேற்கு காசி மலைப்பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் பதிவானது. காலை 8.21 மணியளவில், ரிக்டர் அளவுகோலில் 2.7 அளவிலான இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.

சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 25.53 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 91.20 டிகிரி கிழக்கு தீர்க்கரேகை பகுதிகளில் மையம் கொண்டதாக முதற்கட்டமாக கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் லேசான அளவில் இருந்ததால், சேதம் அல்லது உயிரிழப்பு தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இருப்பினும், நில அதிர்வுகள் ஏற்படும் பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

earthquake morning 2point7 magnitude earthquake strikes Meghalaya


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->