அதிகாலை அதிர்ச்சி…! குஜராத்தில் 3.4 ரிக்டர் நிலநடுக்கம்...! - மக்கள் பதற்றம்...! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தின் நவ்சாரி மாவட்டத்தில் நேற்று அதிகாலை சற்றே அதிர்வூட்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 5.27 மணியளவில் பதிவான இந்த நில அதிர்வு, ரிக்டர் அளவுகோலில் 3.4 எனக் குறிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி வன்ஸ்தா நகரத்திற்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில், நிலத்தின் அடிப்பகுதியில் அமைந்திருந்ததாக புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகாலை நேரத்தில் திடீரென ஏற்பட்ட இந்த அதிர்வால் மக்கள் சில நிமிடங்கள் பீதியடைந்தனர்.

இருப்பினும், எந்தவித சேதங்களோ, உயிரிழப்புகளோ பதிவாகவில்லை என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த மாவட்ட பகுதியில் சிறிய பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Early morning shock 3point4 magnitude earthquake Gujarat People nervous


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->