மதுபோதையில் பலிகொடுக்க வந்த பூசாரி.. ஆட்டிற்கு பதில் மனித தலையை வெட்டியதால் பரபரப்பு..! - Seithipunal
Seithipunal


மது போதையில் இருந்த ஆட்டிற்கு பதில் மனிதனை வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம், வலசப்பள்ளி பகுதியில் எல்லையம்மன் கோவில் உள்ளது. இந்த பகுதியில் ஜனவரி 16-ம் தேதி சங்கராந்தி விழா விமர்சையாக நடைபெறுவடு வழக்கம்.  இந்த விழாவில் ஆடு, கோழி போன்றவற்றை பலியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில், சம்பவதன்று நள்ளிரவு 12 மணி இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சுரேஷ் என்பவர் ஆடு ஒன்றை நேர்த்தி கடனுக்காக பலிகொடுக்க வந்தார்.  அப்போது ஆட்டு தலையை பிடித்து கொண்டார்.

குடிபோதையில் ஆடுகளை வெட்டிவந்த பூசாரி, ஆட்டுக்கு பதிலாக அதை பிடித்திருந்த சுரேஷின் கழுத்தை அரிவாளால் வெட்டினார். உடனடியாக அவரை மீட்ட ஊர்மக்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Drunk man slaughters human instead of goat during Sankaranthi Festival


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->