டெல்லி கார் வெடிப்பு உயிரிழப்பு: உச்ச நீதிமன்றத்தில் மௌன அஞ்சலி!
Delhi Red Fort blast Supreme Court
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே நேற்று மாலை பயங்கர சத்தத்துடன் கார் வெடித்துச் சிதறிய கோர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வில் இன்று மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
சம்பவத்தின் தாக்கம்:
சாலையில் நின்றிருந்த கார் வெடித்ததில், அதன் பாகங்கள் சுமார் 300 அடி உயரத்துக்குத் தூக்கி வீசப்பட்டன. கார் தீப்பிழம்பாக மாறியதில் அருகில் இருந்த வாகனங்களும் எரிந்தன.
இந்தத் தாக்குதலில் ஆரம்பத்தில் 10 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியான நிலையில், மொத்தமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 24 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, டெல்லி உச்சக்கட்ட கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற இரங்கல்:
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், "டெல்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பில் ஏற்பட்ட உயிர் இழப்புக் குறித்து நாங்கள் அனைவரும் மிகவும் வருத்தமடைந்துள்ளோம்," என்று தெரிவித்தார்.
மேலும், உச்ச நீதிமன்றத்தின் சார்பாக, "இந்தத் துயரமான நேரத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். துயரமடைந்தவர்களுடன் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம். உயிரிழந்தவர்களின் ஆன்மாக்கள் சாந்தி அடையவும், குடும்பங்களுக்குத் தைரியம் கிடைக்கவும் பிரார்த்திக்கிறோம்," என்றும் நீதிபதி அமர்வு தெரிவித்தது.
English Summary
Delhi Red Fort blast Supreme Court