டெல்லியில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திடீரென்று பயங்கர தீ விபத்து.! - Seithipunal
Seithipunal


டெல்லியில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

டெல்லி நரேலா பகுதியில் அமைந்துள்ள தார்ப்பாய் உற்பத்தி செய்யும் பிளாஸ்டிக் கிரானுலேஷன் தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவு திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானதுடன், அந்த பகுதி முழுவதும் கரும் நச்சுப் புகை வெளியேறியது. மேலும் அந்த கட்டிடங்கள் மற்றும் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்துள்ளது.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த, ஸ்கை லிஃப்ட் தீயணைப்பு வீரர் உட்பட 25 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் நீண்ட போராட்டத்திற்குப் பின் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi plastic factory fire accident


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->