வங்கக் கடலில் உருவாகிறது புதிய புயல்.. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.!!
cyclone jawath
தெற்கு அந்தமான் கடல் வங்க கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவானது. இது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக மாறி கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுபெற வாய்ப்புள்ளதாகவும், இது வடக்கு ஆந்திரம் - தெற்கு ஒடிசாவை நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தமானில் நேற்று காலை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இது புயலாக மாற கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு ஜாவத் என பெயர் வைக்கப்பட்டுள்ளது
இந்த புயல் ஆந்திரா - ஒடிசா நோக்கி நாளை மறுநாள் நகரக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.