கொரோனாவால் முழு ஊரடங்கை எதிர்கொள்ளும் இந்தியாவின் அண்டை நாடு.. கலக்கத்தில் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் பக்கத்து நாடான பூடான் மாநிலத்தில் முதல் முறையாக கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த மார்ச் மாதம் முதல் அதிகரிக்க தொடங்கியது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது வரை ஊரடங்கு அமலில் உள்ளது.

இதில் பல்வேறு மாநிலங்களில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமலில் உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கடந்த மாதம் முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பூடான் நாட்டில் முதல்முறையாக ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. பூடான் நாட்டில் இதுவரை கொரனோ பாதிப்பு இரட்டை இலக்கத்தில் இருந்த நிலையில், தற்போது 113 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பூடான் அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. மேலும், பள்ளி கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் வணிக வளாகம் மூடவும் உத்தரவிட்டு உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona Lockdown amid announced in Button


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->