கேரளத்தில் கொரோனா மீண்டும் பரவல் – முகக்கவசம் கட்டாயம் என முதல்வர் அறிவுரை! - Seithipunal
Seithipunal


கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் என்றும், பொது இடங்கள் மற்றும் பயணங்களிலும் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டுமென கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார்.

திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: மாநிலத்தில் தற்போது 727 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோட்டயம், எர்ணாகுளம், திருவனந்தபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மாநில சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

தென்கிழக்கு ஆசியாவில் பரவும் ஜேஎன்-இன் வகை ஒமிக்ரான் வைரஸின் LF7 மாறுபாடு கேரளத்தில் கண்டறியப்பட்டுள்ளது. சளி, தொண்டை வலி, இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள், மூப்பினர்கள், கர்ப்பிணிகள், உடல்நலம் குறைந்தவர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். மருத்துவர்கள், பணியாளர்களும் தவறாமல் அணிய வேண்டும்.

மேலும், மழைக்காலத்தினால் பரவக்கூடிய லெப்டோஸ்பிரோசிஸ் போன்ற பாக்டீரியா நோய்களைத் தடுக்கும் வகையில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொதித்த தண்ணீரையே பயன்படுத்துமாறு கூறினார்.

மத்திய சுகாதாரத்துறை தெரிவித்த தகவல்படி, மே 31 தேதிக்குத் தனியாக 227 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கேரளத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,147 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கேரளம் தான் தற்போது அதிக எண்ணிக்கையுடன் முதல் இடத்தில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

corona kerala face mask must


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->