கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை- காங்கிரஸ் அறிவிப்பு.!
Congress no alliance in Karnataka Assembly election
கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் அறிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக காங்கிரஸ் பாஜக கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகி வருகிறது.
அதன்படி, கர்நாடகா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் அங்கு தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகளுமே கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் கர்நாடகாவில் காங்கிரஸ் எந்த கட்சியுடன் கூட்டணி இல்லை என்றும் தனித்து போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டி கே சிவகுமார் பேசியதாவது, கர்நாடகாவில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு ஆட்சியை கைப்பற்றும் என அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Congress no alliance in Karnataka Assembly election