கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை.!
College student committed suicide by hanging in Bangalore
தனியார் கல்லூரி விடுதியில் மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மாணவி சிவானி (21) பெங்களூரு கெங்கேரி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை கல்லூரியில் தேர்வு நடைபெற்றுள்ளது. இந்த தேர்வு எழுதுவதற்கு சிவானி கல்லூரிக்கு வரவில்லை என்பதால், இது பற்றி சக மாணவிகள் விடுதி வார்டனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து வார்டன், சிவானி தங்கி இருந்த அறைக்கு சென்று பார்த்தபோது கதவு உட்புறமாக பூட்டி இருந்துள்ளது.
கதவை திறக்கும்படி பலமுறை கூறியும் சிவானி திறக்கவில்லை என்பதால், இது குறித்து கெங்கேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, சிவானி மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து போலீசார் சிவானியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சிவானி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
College student committed suicide by hanging in Bangalore