5 வயது சிறுமி பலாத்காரம்.! குழந்தைகள் பராமரிப்பு மைய உரிமையாளருக்கு 20 ஆண்டுகள் சிறை.!
Child care center owner jailed for 20 years for raping 5 year old girl in bangalore
பெங்களூருவில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குழந்தைகள் பராமரிப்பு மைய உரிமையாளருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு எலகங்கா நியூ டவுன் பகுதியை சேர்ந்தவர் அஸ்வத் நாராயண் ராவ்(57). இவர் குழந்தைகள் பராமரிப்பு மையம் நடத்தி வருகிறார். இந்நிலையில் பராமரிப்பு மையத்தில் இருந்த 5 வயது சிறுமியை அஸ்வத் நாராயண் ராவ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து சிறுமிக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அஸ்வத் நாராயண் ராவ் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அஸ்வத் நாராயண் ராவை கைது செய்தனர். இதையடுத்து இத்தொடர்பான வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அஸ்வத் நாராயண் ராவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
English Summary
Child care center owner jailed for 20 years for raping 5 year old girl in bangalore