ஏப்ரல் முதல் பாலிமர் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகம்: ரூ.10, ரூ.20 நோட்டுகளைச் சோதனை முறையில் வெளியிட மத்திய அரசு ஒப்புதல்!
Centre Approves RBI Proposal for Pilot Release of 10 and 20 Polymer Currency Notes from April
இந்தியாவில் வழக்கமான காகித ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக, நீண்ட காலம் உழைக்கக்கூடிய 'பாலிமர்' (Polymer) எனப்படும் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் விடுவதற்கான இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) பரிந்துரைக்கு மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.
சோதனை முயற்சி மற்றும் அரசின் விளக்கம்
ரூ.10 மற்றும் ரூ.20 நோட்டுகள்: முதல்கட்டமாக ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்பிலான பாலிமர் நோட்டுகள் சோதனை முறையில் அச்சிடப்பட்டுச் சந்தையில் வெளியிடப்பட உள்ளன.
இணையான புழக்கம்: தற்போதைய காகித ரூபாய் நோட்டுகள் உடனடியாகத் தடை செய்யப்பட மாட்டாது. காகித நோட்டுகளுடன் சேர்ந்து பிளாஸ்டிக் நோட்டுகளும் இணையாகப் புழக்கத்தில் இருக்கும் என நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மக்களவையில் தெளிவுபடுத்தினார்.
ஏப்ரல் மாதம் அறிமுகம்: வரும் ஏப்ரல் மாதம் முதல் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். முதல்கட்டமாக ரூ.100 கோடி மதிப்பிலான பாலிமர் நோட்டுகளை அச்சிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சோதனை முயற்சியின் வெற்றியைக் கொண்டே, உயர் மதிப்புடைய நோட்டுகளில் பாலிமர் முறையைக் கொண்டுவருவது பற்றி முடிவெடுக்கப்படும்.
பாலிமர் நோட்டுகளின் சிறப்பம்சங்கள்
நீடித்த ஆயுட்காலம்: காகித நோட்டுகளை விட பாலிமர் நோட்டுகள் பல மடங்கு கூடுதல் ஆயுட்காலம் கொண்டவை.
சேதமடையாத தன்மை: இவை தண்ணீரில் நனையாது, எளிதில் கிழியாது மற்றும் அழுக்கடையாது என்பதால் பராமரிப்பு எளிதானது.
போலி நோட்டுத் தடுப்பு: நவீன தொழில்நுட்ப அடிப்படையிலான பாதுகாப்பு அம்சங்களை இதில் எளிதாகச் சேர்க்க முடியும் என்பதால், போலி நோட்டுகளை அச்சடிப்பது மிகவும் கடினமாகும்.
சர்வதேசப் பின்னணி
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் பிளாஸ்டிக் பண முறை வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் நீண்ட நாட்களாகத் திட்டமிடப்பட்டு வந்த இத்திட்டம், சோதனை முறைக்குப்பின் முழுமையாகச் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
English Summary
Centre Approves RBI Proposal for Pilot Release of 10 and 20 Polymer Currency Notes from April