காலிஸ்தான் ஆதரவாளர் பயங்கரவாதியாக அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயலில் ஈடுபட்டு வந்த லக்பீர் சிங் லாண்டா கடந்த 2021ம் ஆண்டு மொகாலியில் உள்ள பஞ்சாப் உளவுத்துறை தலைமையகம் மீது ராக்கெட் தாக்குதல் நடத்த திட்டமிட்டவர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டார்ன் டரனில் உள்ள சர்ஹாலி காவல் நிலையத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் லக்பீர் சிங் லாண்டாவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில் கடந்த செப்டம்பரில் கனடாவை சேர்ந்த காலிஸ்தான் பயங்கர வாதிகளின் நெருங்கிய கூட்டாளிகளாக கருத்தப்பட்டவர்கள் தொடர்புடைய 48 இடங்களில் பஞ்சாப் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின் முடிவில் சிலர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒரு வியாபாரியிடம் லாண்டா ஹரிகே பெயரில் 15 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிராக பல்வேறு சதி செயலில் ஈடுபட்டு வரும் லக்பீர் சிங் லாண்டாவை தற்போது பபயங்கரவாதி என மத்திய உள்துறை அமைச்சம்
அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

centralgovt Declan Khalistan supporter as terrorist


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->