இந்தியாவில் ஏ.டி.எம் மையங்கள் மூடப்படுகிறதா? - மத்திய அரசு விளக்கம்.!! - Seithipunal
Seithipunal


பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடிக் கொடுக்கும் வகையில், இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. பாகிஸ்தானின் இந்த தாக்குதல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.

இதற்கிடையே இந்தியாவில் ஏ.டி.எம். மையங்களை மூடுவதற்கான வாய்ப்புள்ளதாக வாட்ஸ்ஆப்பில் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. அதாவது, ரான்சம்வேர் என்ற வைரஸ் மூலம் பாகிஸ்தான் சைபர் தாக்குதல் நடத்துவதால் அடுத்த 2-3 நாட்களுக்கு ஏ.டி.எம். மையங்கள் மூடப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், ஆன்லைன் வாயிலாக எந்த பரிவர்த்தனையையும் செய்ய வேண்டாம் என்றும், DANCE OF THE HILLARY என்ற பெயரில் வாட்ஸ்ஆப்பில் வரும் வீடியோவை திறக்க வேண்டாம் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் பி.பி.சி. வானொலியில் வெளியிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், பலரும் இதை வாட்ஸ்ஆப்பில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த தகவல் உண்மையல்ல என்று மத்திய அரசு மறுத்துள்ளது. அதாவது, இந்த செய்தி போலியானது என்றும், ஏ.டி.எம். மையங்கள் வழக்கம் போல் செயல்படும் என்றும், சரிபார்க்கப்படாத வாட்ஸ்ஆப் செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

central government explain close atm in india


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->