போர் நிறுத்திற்கு ஒப்புதல். ஆனால் எந்த நிபந்தனைக்கும் இந்தியா உடன்படவில்லை; மத்திய அரசு விளக்கம்..! - Seithipunal
Seithipunal


பஹல்காம் பகுதியில்  பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 09 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் தாக்கி அளித்துள்ளது.

இந்த நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளை குறிவைத்து கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் தாக்குதல் முயற்சிகளை இந்திய ராணுவம் தொடர்ந்து முறியடித்து வந்தது.

இந்த நிலையில், தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இதை இந்திய மற்றும் பாகிஸ்தான் அரசுகள் உறுதி செய்துள்ளன.

இந்நிலையில், குறித்த போர் நிறுத்தத்திற்கு பாகிஸ்தானிடம் இருந்தே அழைப்பு வந்ததாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்கூறுகையில், "போர் நிறுத்தம் தொடர்பாக பாகிஸ்தானிடம் இருந்து அழைப்பு வந்தது. இதைத் தொடர்ந்து இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

அத்துடன், போர் நிறுத்தத்திற்கு முன்போ அல்லது பின்னரோ எந்த நிபந்தனைக்கும் இந்தியா உடன்படவில்லை என்றும், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்திய முடிவில் எந்த மாற்றமும் இல்லை எனவும்,  மற்ற அனைத்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன என்றும், பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு அப்படியே உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ceasefire agreed But India did not agree to any conditions Central government explains


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->