வரப்பில் ஏன் பூச்செடி வைத்தாய், தம்பியை சுட்ட அண்ணன்..!
Brother shooted his younger brother
குடும்ப தகராற்றால் தம்பியை சுட்ட அண்ணனை காவல்துறையினர் கைது செய்தனர்.
கர்நாடகா மாநிலம், சித்திரமட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேஷ். இவரது அண்ணன் முனுசாமிக்கு அந்த பகுதியில் சொந்தமாக விளைநிலங்கள் வைத்துள்ளார்.இந்த நிலையில் முருகேஷ், வயலின் வரப்புகளில் பூச்செடிகளை நட்டுள்ளார். இதனை கண்ட அண்ணன் முனுசாமி தம்பியிடம் பூச்செடிகளை நட்டதை கண்டித்துள்ளார்.
இதனால், இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த முனுசாமிவீட்டிற்கு சென்று தான் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து வந்து தம்பியை சுட்டுள்ளார். ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர். முனுசாமியை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Brother shooted his younger brother