திருமணத்திற்கு மறுத்த காதலி.! காதலன் எடுத்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் காதலி திருமணத்திற்கு மறுத்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா ஆல்தூர் மேதர் தெரு பகுதியை சேர்ந்தவர் யோகேஷ் (25). இவரும், அதேப்பகுதியை சேர்ந்த 18 வயதுடைய இளம் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். மேலும் இவர்கள் இருவரும் நெருங்கி பழகி பல இடங்களுக்கு ஜோடியாக சென்றுள்ளனர்.

இந்நிலையில் யோகேஷ், அந்தப் பெண்ணிடம் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். ஆனால் அந்த இளம் பெண் திருமணத்திற்கு மறுத்துள்ளார். இதனால் மன வேதனையில் இருந்த யோகேஷ் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் யோகேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் காதலி திருமணத்திற்கு மறுத்ததால் யோகேஷ் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Boyfriend commits suicide after girlfriend refuses to marry him in Karnataka


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->