பீகார் அரசியலில் அதிரடி மாற்றம்: பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமார்! - Seithipunal
Seithipunal


எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நிதிஷ்குமாருக்கு இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிகளுடன் முரண்பாடு ஏற்பட்டதால் இந்திய கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகுவதாக தகவல் வெளியானது. 

இந்த கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியிலிருந்து விலகி முதல் மந்திரி ராஜினாமா செய்து பாஜகவுடன் கூட்டணி வைத்து மீண்டும் முதல் மந்திரி பதவி ஏற்க நிதிஷ்குமார் திட்டமிட்டுள்ளார். 

இதற்காக இன்று நிதீஷ் குமார், முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் பிகார் மாநில ஆளுநரை முதல் மந்திரி நிதிஷ்குமார் இன்று காலை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் என தகவல் வெளியானது. 

இந்நிலையில் எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதங்களை பெற்ற நிதீஷ் குமார் ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநரை சந்தித்து முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்து கடிதம் கொடுத்தார். 

அதனை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து பாரதிய ஜனதா எம்எல்ஏக்கள் ஆதரவுடன் புதிய ஆட்சி அமைப்பதாகவும் கடிதங்களை கொடுத்தார். அதையும் ஆளுநர் ஏற்றுக்கொண்டார். நிதீஷ் குமார் நடவடிக்கையால் பீகார் அரசியலில் இன்று அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bihar Nitish Kumar resigned cm post


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->