அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்த 4 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதி.! - Seithipunal
Seithipunal


சீனாவில் கடந்த சில நாட்களாக புதிய வகை கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது. தினசரி பாதிப்பு 10 லட்சமாக இருந்த நிலையில் தற்போது  கோடி கணக்கில் கொரோனா பாதிப்பு பரவி வருகிறது.

அதன் காரணமாக இந்தியாவில் மத்திய அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சர்வதேச விமான நிலையங்களில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை தீவிர படுத்த அறிவுறுத்தியுள்ளது.

இதன் காரணமாக சீனா உட்பட 5 நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் விமான பயணிகள் அனைவரும் கொரோனா சோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பல்வேறு மாநிலங்கள் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து மேற்கு வங்காளத்திற்கு வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு பி.எப்-7 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும்  தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BF7 covid Variant affected 4 peoples in Kolkata


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->