பழனி கோவிலுக்கு செல்போன் கொண்டுச் செல்ல இன்று முதல் தடை.! - Seithipunal
Seithipunal


பழனி கோவிலுக்கு செல்போன் கொண்டுச் செல்ல இன்று முதல் தடை.!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில். இந்தக் கோவிலின் கருவறையை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்புவது அதிகமாகி வருகிறது. இதனை தடுக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் பழனி கோவிலில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. அதன் படி கோவில் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், "பழனி கோயில் மலை மீது அக்டோபர் 1ம் தேதி முதல் (அதாவது இன்று முதல்) செல்போன் கொண்டு செல்ல தடை அமலுக்கு வருகிறது. ஆகவே பக்தர்கள் கைபேசி மற்றும் புகைப்படம் எடுக்கும்  வீடியோ, சாதனங்களை கோவிலுக்கு கொண்டு வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அப்படி கொண்டு வரும் பக்தர்கள் தங்களது கைபேசி மற்றும் புகைப்படம், வீடியோ எடுக்கும் சாதனங்களை கோவில் நுழைவாயிலில் பாதுகாப்பு மையங்களில் ஒரு கைபேசிக்கு ஐந்து ரூபாய் கட்டணம் செலுத்தி ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும். பின்னர் தரிசனம் முடிந்து பெற்றுச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

banned carry cellphone in palani temple from today


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->