இந்திய- வங்கேச எல்லையில் அதிர்ச்சி; தேயிலை விவசாயி​ ஒருவரை சிறைபிடித்து சென்றுள்ள வங்கதேசத்தினர்; ஊடுருவல்காரருக்காக டிமாண்ட்.. ! - Seithipunal
Seithipunal


மேற்​கு​வங்க மாநிலத்தில், ஜல்​பைகுரி மாவட்​டம், தசார் பாரா கிராமத்​தைச் சேர்ந்த தேயிலை விவசாயி​ ஒருவர் வங்கதேசத்தினரால் சிறைபிடித்து சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீபங்​கர் கோபே என்ற நபர், 2 நாட்​களுக்கு முன்பு சவுல்​ஹாட்டி எல்லை வேலி​யில் இருந்து 150 அடி தூரத்​தில் தனது தேயிலைத் தோட்​டத்​தில் பணி​யில் ஈடுபட்டிருந்​தார். அப்​போது சுமார் 20 பேர் கொண்ட கும்​பல் அவரை சிறைப்​பிடித்​துச் சென்றுள்ளது.

குறித்த கும்​பல், கோபேவை சர்வதேச எல்​லை​யைத் தாண்டி வங்கதேச எல்​லைப் பாது​காப்​புப் படை​யிடம் ஒப்​படைத்​த​தாக கூறப்​படு​கிறது. இந்த சம்பவத்துக்கு 02 நாட்​களுக்கு முன்​னர், சவுல்ஹாட்டி எல்​லைப் பகு​தி​யில் கம்பி வேலியை வெட்டி இந்தியா​வுக்​குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற வங்​கதேச நபர் ஒரு​வரை, எல்லைப்பாது​காப்பு படை வீரர்​கள் சிறை பிடித்​துள்ளனர்.

இதற்கு பழி​வாங்​கும் வகை​யிலேயே கோபே கடத்​தப்​பட்​ட​தாக அவரது குடும்​பத்​தினர் குற்​றம் சாட்​டி​யுள்​ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கோபே பேசுவது போன்ற ஒரு வீடியோ வெளி​யாகி​ தற்போது பதற்றத்தை அதிகரித்துள்ளது.

அந்த வீடியோவில் 'வங்கதேசத்​தைச் சேர்ந்த ஊடுருவல்காரர் தமிஸ் உத்​தீனை இந்தியா விடு​வித்​தால், தானும் விடுவிக்​கப்​படு​வேன் 'என்று பேசியுள்​ளார். இதனையடுத்து கோபேவை விடுவிக்க எல்​லைப் பாது​காப்பு படை நடவடிக்கை மேற்​கொண்​டுள்​ளது. இந்​தச் சம்​பவத்​தால் இந்​தி​யா-வங்​கதேச எல்​லை​யோர கிராமங்​களில்​ அச்சம் நில​வுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bangladeshis hold tea farmer captive on India and Bangladesh border


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



Seithipunal
--> -->