10 லட்சம் விளக்குகளால் ஜொலிக்க போகும் அயோத்தி நகரம்.! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உத்தர பிரதேச மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ராமர் கோவிலின் திறப்பு விழாவை முன்னிட்டு, நாளை இரவு 10 லட்சம் விளக்குகளால் அயோத்தி நகரம் ஜொலிக்க உள்ளது. 

மேலும், அரசின் அழைப்பின் பேரில் அயோத்தியில் உள்ள வீடுகள், கடைகள், வழிபாட்டுத் தலங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் என்று அனைத்து இடங்களிலும் "ராம் ஜோதி" விளக்கேற்றப்படும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ayodhi ramar temple 10 lakhs light


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->