ஆட்டோ டிரைவருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. பம்பர் லாட்டரி குலுக்கலில் ரூ.25 கோடி.!
Auto driver won 25 crores in lottery in kerala
நேற்று முன்தினம் வாங்கிய லாட்டரி சீட்டில் நேற்று 25 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளதாக ஆட்டோ டிரைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் ஓணம் பண்டிகையை ஒட்டி சிறப்பு லாட்டரி சீட்டு குலுக்கல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த குலுக்களில் 30 வயதான ஆட்டோ டிரைவர் அனுப் என்பவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசு ரூபாய் 25 கோடி கிடைத்துள்ளது.
இதனையடுத்து அரசு சார்பில் நடத்தப்பட்ட லாட்டரியில் தனது 25 கோடி பரிசு கிடைத்ததை அடுத்து ஆட்டோ டிரைவருக்கு மகிழ்ச்சி அடைந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை தான் இந்த லாட்டரி டிக்கெட் வாங்கினேன் என்றும் 25 கோடி ரூபாய் பணத்தை வைத்து என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை என்றும் குடும்பத்தாருடன் கலந்து பேசி முடிவு செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Auto driver won 25 crores in lottery in kerala