டெல்லி முதல்வர் தாக்கப்பட்ட விவகாரம் - ஆட்டோ ஓட்டுநர் கைது.!!
auto driver arrested for delhi cm attack issue
நாட்டின் தலைநகர் டெல்லியின் முதலமைச்சர் ரேகா குப்தா கடந்த 20-ந்தேதி காலையில் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் மக்கள் குறை கேட்கும் நிகழ்வில் பங்கேற்றார். அப்போது, ஒருவர் அவரை திடீரென தாக்கிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தத் தாக்குதலில் ரேகா குப்தாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது நலமுடன் உள்ளார் என்று மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது.
இதற்கிடையே இந்த தாக்குதலை நடத்திய ராஜேஷ் கிம்ஜி என்ற நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து போலீசார் ராஜேஷுடன் தொலைபேசி அழைப்புகள் மற்றும் சாட்டிங் வழியே தொடர்புடைய 10 பேர் குறித்து விசாரித்து வருகின்றனர். அதில் 5 பேரின் விவரங்கள் ராஜேஷின் மொபைல் போனில் இருந்த தகவல்களை கொண்டு எடுக்கப்பட்டுள்ளன. அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், டெல்லி முதலமைச்சர் தாக்குதலில் தொடர்புடைய ராஜேஷின் நண்பரான ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் குஜராத்தின் ராஜ்கோட் நகரை சேர்ந்த தஹ்சீன் சையது என்பதும், அவர் ராஜேஷுக்கு ரூ.2 ஆயிரம் பணபரிமாற்றம் செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
auto driver arrested for delhi cm attack issue