கஞ்சா போதை.. தள்ளாடிக்கொண்டே வீட்டு வந்த பள்ளி சிறுமி.. தட்டிக்கேட்ட தாய்க்கு கொடுமை.!
Anthra School Girl took weed
ஆந்திர மாநிலத்தில் உள்ள சந்திரகிரியில் அரசு பள்ளி ஒன்றில் 15 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். சம்பவ தினத்தில் அந்த பெண் காலையில் வழக்கம் போல பள்ளிக்கு சென்றுள்ளார். மாலையில் மீண்டும் வீட்டிற்கு வந்த பெண் சிறிது நேரத்தில் புறப்பட்டு வெளியில் சென்று விட்டார்.
அதன்பின் சுமார் 2 மணி நேரங்கள் கழித்து வீட்டில் வந்தபோது போதையில் தள்ளாடிக் கொண்டு இருந்தார். இதை அடுத்து அவர் தள்ளாடுவதை கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து சிறுமியை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், அவர் போதையில் இருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து இது எந்த விதமான போதை என்று மேலும் விசாரித்ததில் அவர் கஞ்சா அடித்ததாக தெரிவித்துள்ளார். தீவிரமாக விசாரித்ததில் அவரது பள்ளிக்கு அருகில் உள்ள தேநீர் கடையில் கஞ்சா கிடைப்பது தெரியவந்துள்ளது. பின் அந்த கஞ்சா கொடுத்தவரிடம் போய் தட்டி கேட்ட தாயை அவர் அவதூறாக பேசியுள்ளார்.
இதனை அடுத்து அந்த பெண்ணின் தாய் போலீசில் புகார் கொடுக்க அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு அருகில் இப்படி தேநீர் கடையில் போதை பொருட்கள் விற்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Anthra School Girl took weed