அச்சத்தில் எதிர்க்கட்சிகள்: பரவும் வதந்திகள்... - ஆந்திர மந்திரி ரோஜா பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் சுற்றுலாத்துறை மந்திரியாக உள்ள ரோஜா தடா அருகே சுற்றுலா விடுதிகளை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசி இருப்பதாவது, 

ஓங்கோலு பாராளுமன்ற தொகுதியில் நான் வேட்பாளராக போட்டியிட உள்ளதாக வதந்தி பரவுகிறது. ஆனால் இந்த முறையும், 2 முறை தனக்கு ஆதரவு அளித்த நகரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவேன். 

தொடக்கத்தில் சீட்டு கிடையாது என தெரிவித்தார்கள். இப்போது வேறு எங்காவது சென்று போட்டி இடுவேன் என மற்றொரு கதையை உருவாக்கியுள்ளனர். 

ஜெகன்மோகன் ரெடியின் நலன் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை பார்த்து எதிர்க்கட்சிகள் அச்சமடைந்துள்ளார்கள். சந்திரபாபு நாயுடு, நாரா லோகேஷ், பவன் கல்யாண், ஷர்மிளா ஆகியோர் தங்களுக்கு வாக்குரிமை உள்ள மாநிலத்திற்கு நிச்சயம் திரும்பிச் செல்வார்கள் என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Andhra minister Roja interview


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->