பவன் கல்யாணை சந்தித்த கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு: இதுதான் காரணமா?
Ambati Rayudu meets Pawan Kalyan
கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு சமீபத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்தார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக முன்பு ஆந்திராவில் ஆளும் கட்சியான ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் ஆந்திரா முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் முன்னிலையில் இணைந்தார்.
இதனைத் தொடர்ந்து தீவிர அரசியல் பணியில் ஈடுபடுவார் என எதிர்பார்த்து இருந்த நிலையில் கட்சியிலிருந்து ஒரே வாரத்தில் விலகுவதாக அறிவித்தார்.
அரசியலில் சேர்ந்த ஒரு வாரத்திலேயே ராயுடு ஓய்வு அறிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியது. குண்டூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக சீட் கேட்டு மறுக்கப்பட்டதால் அம்பதி ராயுடு கட்சியிலிருந்து விலகியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் ஆளும் கட்சியில் இருந்து விலகிய சில நாட்களில் அம்பதி ராயுடு ஜனசேனா காட்சி தலைவரும் நடிகருமான பவன் கல்யாணை சந்தித்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படத்தை அம்பது ராயுடு எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்து, 'உறவினர்கள், நண்பர்கள் வலியுறுத்தியதால் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாணை நான் சந்தித்தேன்.
இருவரும் அதிக நேரம் உரையாடினோம். இருவரது எண்ணங்களும் ஒரே வரிசையில் உள்ளது' என பதிவிட்டுள்ளார். இதனால் அம்பதி ராயுடு விரைவில் ஜனசேனா கட்சியில் இணைவார் என தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
Ambati Rayudu meets Pawan Kalyan