மதுபான கொள்கை ஊழல் விவகாரம்: ஆம்ஆத்மி கட்சி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!  - Seithipunal
Seithipunal


டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த வழக்கில் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் மதுபான கொள்கை ஊழலுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளின் புதிய குற்றப்பத்திரிக்கையில் ஆம் ஆத்மி கட்சி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

ஊழல் வழக்கில் ஒரு விசாரணை அமைப்பு தாக்கல் செய்யும் குற்றப்பத்திரிக்கையில் ஒரு தேசிய கட்சியும் குற்றவாளியாக இருப்பது இதுவே முதல்முறை. 

குற்ற பத்திரிகையில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை குற்றவாளியாக குறிப்பிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்று இடைக்கால ஜாமின் வழங்குவது தொடர்பான உச்ச நீதிமன்ற விசாரணைக்கு பிறகு குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. இன்று முழுவதும் விசாரணை நடந்ததால் குற்றப்பத்திரிகை நாளை தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Liquor policy malpractice charge sheet filed against Aam Aadmi party


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->