ஜார்க்கண்டில் ஒரு காட்டுயானையின் அட்டூழியத்தால் பறிபோன 23 அப்பாவி உயிர்கள்; தமிழ்நாட்டில் இருந்து 06 கும்கிகளை வரவழைக்க முடிவு..! - Seithipunal
Seithipunal


ஜார்க்​கண்​டி மாநிலம் வனப்​பிரதேசம் அதிகம் நிறைந்தது. இதன் காரணமாக அங்கு யானை​கள் நடமாட்​டம் அதி​கம் உள்​ளன, அம்மாநிலத்தில்,மேற்கு சிங்​பும் மாவட்​டத்​தில் ஒரு முரட்டு காட்டுயானை தாக்கியதில்கடந்த 02 வாரங்​களில் மட்டும் 23 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவ​காரம் குறித்து நேற்று ஜார்க்​கண்ட் சட்​டப்​பேர​வை​யில் காங்​கிரஸ் எம்​எல்ஏ ராமேஸ்​வர் ஓரான் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதாவது, யானை​களின் அச்​சுறுத்​தலை சமாளிக்க அரசு கொள்​கை​யில் மாற்​றம் கொண்டு வர வேண்​டும் என்றும், யானை மற்​றும் மனித மோதலைக் குறைக்க பயனுள்ள நடவடிக்​கைகளை எடுக்க வேண்​டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், காட்டு யானை​யால் ஏற்​படும் உயி​ரிழப்​புக்கு ரூ.04 லட்​சம் வழங்​கப்​படு​கிறது. இதை, ஒடிசா போன்று ரூ.06 லட்​ச​மாக உயர்த்த வேண்​டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு அம்மாநில முதல்​வர் ஹேமந்த் சோரன் பதிலளித்து பேசுகையில் கூறியதாவது:

ஜார்க்​கண்​டில் யானை - மனித மோதல் கடுமை​யான சமூக மற்​றும் சுற்​றுச்​சூழல் நெருக்​கடி​யாக மாறி​யுள்​ளதாகவும், யானை நடத்​தை​யில் ஏற்​படும் மாற்​றத்​துக்கு சுற்​றுச்​சூழல் மாற்​றங்​கள் ஒரு முக்​கிய காரண​மாக உள்​ளது. அரசு முழு பிரச்​சினையை​யும் கவனித்து வரு​கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மாநிலத்​தில் காட்டு யானையை கட்டுப்படுத்தும் அளவில், பயிற்சி பெற்ற மீட்​புக் குழு தற்​போது இல்​லை என்றும், இந்​தக் குறை விரை​வில் தீர்க்​கப்​படும் என்றும் நம்பிக்கை கொடுத்துள்ளார். இதற்காக தமிழ்​நாட்​டில் இருந்து 06 கும்கி யானை​கள் அழைத்து வர உள்ளதாகவும், இவை முரட்டு காட்டு யானை​களை கட்​டுப்​படுத்​த பயன்​படுத்​தப்​படும்​ என்று முதல்வர் ஹேமந்த் சோரன் பதிலளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

After 23 people were killed by a wild elephant in Jharkhand it was decided to bring in Kumkis from Tamil Nadu


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->